Sunday, February 13, 2011

தஞ்சாவூர் பொம்மைகள்


இண்டர்லோக்
விசயத்தில்
நம் இன
சமுதாயத் தலைவர்களின்
நடவடிக்கைகள்
உங்களை
நினைவுபடுத்துகிறது.


நன்றி
தலையாட்டி பொம்மைகள்

Thursday, January 20, 2011

இண்டர்லோக்

இந்தியர்களை
இழிவுபடுத்தும் நூல்

எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்
இதை தாங்க ஏது இதயம்
இரவல் வரிகள்தான்

இதயத்தை
உருகவைக்கும் வரிகள்


துடித்தோம்
அறிக்கை விட்டோம்
எரித்தோம்
ஆய்வு செய்தோம்
கூடினோம் பேசினோம்
முடிந்தபாடில்லை
யாரும்
செவி சாய்த்தபாடில்லை

இன்னும் துடிக்கின்றோம்

இது தொடர்ந்தால்
இந்தியன் என்ற பெயர் மாறி
.................
என்றே நம் இனம் மாறும்

ஆனாலும்
ஒரு வழி உண்டு

இந்தியர்களே
ஒன்று சேருங்கள்
ஒற்றுமையாக
ஒத்த முடிவெடுங்கள்

இந்தியர்களின்
எதிர்ப்பைக் காட்டுங்கள்

அதன்பின் பாருங்கள்

Thursday, January 13, 2011

தாடி




ஓவியனுக்கு அழகு
ஆன்மீகவாதிக்கு அழகு
இலக்கியவாதிக்கு அழகு

மூத்த அரசியல்வாதிக்கு அழகு
வெள்ளை தாடி
சிம்மக்குரலோனுக்கு அழகு






ஊர் சுற்றிக்கும் அழகு
தூங்கு மூஞ்சிக்கும் அழகு

சூதாடிக்கும் அழகு
காதல் தோல்வி
இளைஞனுக்கும் அழகு

உன் முகத்தில் தாடியா
இதில் எந்த ரகம் ?

எழுத மறந்த ரகமா ?

தாடி
உன் அடையாளம்
வளரும் முன்
யோசி.

Thursday, December 2, 2010

டத்தோ கோ.பழனிவேல் அவர்களே


நினைத்துப்பார்க்கின்றேன்

சாதனைத் தலைவரின் வாரிசே
சரித்திரம் படைக்கவிருக்கும்
தேசிய தலைவரே
டத்தோ கோ.பழ்னிவேல் அவர்களே

பிறந்த நாள் வாழ்த்துகள்


இதயத்து ஈரத்திலிருந்து
வாழ்த்துகின்றேன் -வெற்றி உமதே
தொகுதி,மாநிலம்,நாடு என ஆற்றிய
தொண்டினை நினைத்துப்பார்க்கின்றேன்

இரவின் மடியில்
உலகம் தூங்கியபோதும்
நீர் மட்டும் கண் விழித்தீர்
மக்களுக்காக சிந்தித்தீர்

தள்ளாடும் சமுதாயம்
தலை நிமிர
தேசியத் தலைவருக்கு
தோள் கொடுத்தீர்

நீர் வழங்கிய மான்யமோ
ஆயிரமாயிரம்
செயல் திறனைச் சொல்ல
சொற்களைத் தேடுகின்றேன்

தமிழ்ப்பள்ளிகளுக்கும்
கோவில்களுக்கும்
பேசும் சக்தி இருந்தால்
உன் போராட்டத்தில்
பிரச்சாரப் பீரங்கிகளாக
வெடித்திருக்கும்

உன் எதிரிகள் உம்மை வீழ்த்த
உன்னைச் சுற்றியே
தருணம் பார்த்து
காத்துக் கொண்டிருகிறார்கள்

உமக்குப் புரியாததா
அல்லது தெரியாததா
அரசியல் உமக்கு அல்வா
அமைதியாகவே
அடக்கி விடுவாய்
எனபது தெரியும்

நீர் உன் தமிழை மட்டும்
உயர்த்திக் கொள்
அதுவே உன் பலஹீனம்
உன்னைக் கவிழ்க்க
அதுதானே எதிரிகளுக்கு
ஆயுதம்

நீர் வீழமாட்டாய்
அய்யன் துணை இருக்கும்வரை
உன் நிழலில் நிச்சயம்
நம் சமுதாயம் உயரும்


யானையின் பலமில்லை உம்மிடம்
சிங்கத்தின் சீற்றமில்லை உம்மிடம்
புலியின் வேகமில்லை உம்மிடம்
ஆனால்
வேகமும் விவேகமும் திறமையும்
அய்யனின் அருளும் உண்டு

தேசியத்தலைவரே
வாழ்த்துகின்றேன்.
வாழ்க பல்லாண்டு !

Monday, May 10, 2010

அன்னையே ,என் உயிரே

மூத்த மகனோ
காஞ்சிப்புரச் சேலையைப்
பரிசு தர

மகளோ
வகை வகையான
சுவையான
உணவு சமைக்க

மருமகளோ
உடனிருந்து அன்புடன்
உபசரிக்க


இளைய மகனோ
இரவு உணவுக்கு
அழைத்துச் செல்ல

பேரக்குழந்தைகளோ
கோவில் பிரசாதத்தை
போட்டி போட்டு ஊட்ட


அன்னையர் தினத்தன்று
கோடீஸ்வரனுக்குக்கூட
கிடைக்காத வரம்

அன்பு மழையில்
ஆனந்தக் கண்ணீரில்
அம்மா நனைந்தபொழுது
அவள்
கொடுத்து வைத்தவள்

பணம் என்னடா
பணம் ! பணம் !

நித்யா

சிறைச்சாலை
சீருடை
சாமியாருக்கு
இல்லை

தனிச்சிறப்புதான்

!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, February 23, 2010

முருகா நீயுமா


தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்



சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா

நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்

பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்


புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை

Tuesday, February 9, 2010

தமிழ் மகன்



ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது

போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ

மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்

தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்

Wednesday, January 20, 2010

21.12.2012

ஓர் விரல் காட்டி நின்றாய்
ஆணையிடுகிறாய்
என நினத்தோம் -
ஆனால்
ஓராண்டுதான்
வாழப்போகிறேன் என
சொல்லாமல் சொல்லிவிட்டாயே
அறிஞர் அண்ணாவின்
மறைவின்போது
கலைஞரின்
கண்ணீர் அஞ்சலி

நான் மூவிரல் காட்டி
மூன்றாண்டுகள் தான்
வாழப்போகின்றோம் என
சொல்லிவிட்டேன்
புரிந்து கொண்டால் சரி
21.12.2012

Thursday, November 26, 2009

தலைவரைத் தேடுகின்றேன்


மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திட
வேண்டுமய்யா



தனித்துவாழ்
பெண்மணியாய்
வாழ்ந்திட என்ன
வரம் பெற்றேனய்யா

குழந்தைகளைக்
கரைச் சேர்க்க
கடன் கேட்டு அலைந்த
கட்சித் தலைவர்கள்
ஏராளம்
கை நீட்டி வழி காட்டும்
தலைவர்களைக் கண்டேன்

குறைக் கேட்டு
கைக் கொடுத்து
கரை சேர்க்கும்
தலைவர்களை
ஒருவரையும்
காணவில்லை

தேடுகிறேன்
கிடைக்கவில்லை

(இது ஓர் உண்மையின் புலம்பல்)
தனித்து வாழ் தாய்மார் ஒருவர் பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்டு தன் கதையை கண்ணீர்வழி வடித்த உண்மைச் சம்பவம்.பத்திரிக்கையில் சந்தித்தவர்களையும் ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவிப்பேன் என்று மனவேதனையோடு கூறினார்.)

Tuesday, October 27, 2009

இரத்த உறிஞ்சிகள்


வியர்வை சிந்தி
உழைத்த பணம்
சிரிப்புடன்
வட்டி முதலையின்
பையில்

Tuesday, October 13, 2009

தீபாவளி நினைவலைகள்

தீபாவளி தீபாவளி
திருநாள்
அதோ வருகிறது பார்
கோழிக்கறி அங்கே
இட்டிலியும் இங்கே
சுவைத்து சுவைத்து
சாப்பிடலாம் வா”

அன்று தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பெரியோர்களும் தீபாவளி காலங்களில் உதிர்த்த வசனங்களை நினத்துப்பார்க்கின்றேன்.
எத்துணை சுகம்!

தீபாவளிக்கு சட்டை வாங்கியாச்சா ?
ஒரு உடுப்புதான் அப்பா வாங்கினாரு....
இன்னைக்குப் போய் எங்க தங்கைச்சிக்கு,அண்ணனுக்கு,அக்காவுக்கு வாங்குவாரு!



பட்டாசு நேத்திக்கு கொஞ்சம் வாங்கிட்டோம்
தீபாவளிக்கு முத நாளு முச்சந்தி கடையிலே ரொம்ப வாங்கலாம்னு அப்பா சொன்னாரு.

அப்பா வாங்கின 007 சட்டை சின்னதா இருக்கு..
அப்புறம் போய் மாத்தணும்

டேய் இராமசாமி உங்க அப்பாகிட்ட சொல்லு.. கந்தாயி மாமாவுக்கு
இந்த ஆட்டை கூறு போடும்போது மூணு கூறு கேட்டாருன்னு சொல்லு.
தொடைபகுதியா வேணும்னு சொல்லு.
அப்புறம் காசு தருவாருன்னு சொல்லு. சரியா....அவருக்குத் தெரியும்
சரி...சரி....சொல்றேன்

டேய் எம்.ஜி.ஆர்,சிவாஜி இரண்டும் படம் ஓடுது.எதற்குடா போறே ?
முத நாளு எம்.ஜி ஆர். படம்.அப்புறம் சிவாஜி படம்.
அடுத்த நாள் கோலாலம்பூருக்கு போய் அங்க ஒரு படம் பார்க்கலாம்.
கண்ணாவையும் கேளுடா வந்தா எல்லாரும் போலாம்.

தீபாவளிக்கு காலையிலேயே வந்துடு.நம்ம வீட்லேதான் பசியாற.அப்புறம் உன் வீடு.முடிஞ்சதும் குப்பு வீட்டுக்குன்னு ஒரு வட்டம் போடலாம். மறந்திடாதே

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு தீபாவளிக்கு.பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு உடுப்புகூட வாங்கலே.கடைக்கார்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்கிட்டு வர்ரேன் புள்ளே.அப்புறம் கொடுக்கலாம். (தந்தையின் தவிப்பு)

தீபாவளி வந்துட்டா போதும்.இவங்க தொல்லை தாங்கலே.

வெடிடா நல்லா வெடிடா பேய் பிசாசு எல்லாம் ஓடுணும்.
பக்கத்துலே கேக்கிற சத்தத்தைவிட ரொம்ப சத்தம் வரணும்

தீபாவளிக் கார்ட்டெல்லாம் ஒட்டுங்கடா.டேய் மாமாவோட கார்டை மேலே ஒட்டுங்க.இல்லேனா மாமா வந்தா பார்த்துட்டு ஏசுவாரு.
இந்த வருஷம் கார்டு குறஞ்சிருக்கு.ஏண்டா......

அனுப்பின எல்லோருக்கும் கார்டு அனுப்பிட்டிங்களா. நாளைக்கு ஒரு சொல்லு வராதபடி பார்த்துக்கொங்க.

ஏண்டி லட்சுமி இப்போ போய் சொல்ற ..தம்பியை கூப்பிடு.டேய் விக்கி கடை தொறந்து இருந்தா ஒரு கா கட்டி மிளகா தூள் வாங்கிட்டு வா.அப்பா பேரை சொல்லு.

சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் கவலைப்படாதே.உங்க அப்பா கண்டிப்பா பித்தளைச் சங்கிலி வாங்கிட்டு வந்திடுவாரு.நாளைக்குத்தானே தீபாவளி.
முதலே சீயக்காய் சவர்க்காரம் எடுத்து மூலையிலே வை.

பலகாரத்தை சாப்பிடாதிங்க. முதல்ல சாமிக்கு படையல் போடணும்.டேய்..டேய் சொன்னா கேக்க மாட்டிங்களே !நீயும் அப்படித்தான் உங்க அக்காவும் அப்படித்தான்

அம்மா...கண்ணு எரியுதம்மா..போதும்மா..தண்ணி ஊத்துங்கம்மா....
நல்லா எண்ணே தேச்சு குளிக்கணும்டா....


நான் மறந்துவிட்டதை நீங்கள் நினைவு கூறுங்களேன்.மகிழ்வோம்.
தீபாவளி வாழ்த்துகள்


(இப்பொழுது நாகரிகச் சூழலில் சுகமான இந்த வசனங்கள் மறைந்து சிக்கனம் என்ற போர்வையில் மகிழ்ச்சி போலி நடனம் ஆடுகின்றது)

Saturday, September 26, 2009

உன்னைப் போல் ஒருவன்

உலகநாயகனே
நீ நல்லவரா
கெட்டவரா

நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை

சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்

நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்

சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்

சிரிப்பின் பொருள்
புரியவில்லை

வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்

சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை

கொடுப்பார் அல்லவா
சுயநலம்

Friday, September 25, 2009

இறப்பதை விட



மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !

இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே

இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !

இறப்பதைவிட
இருப்பது மேல்

இது ஓர்
உண்மை உரையாடல்

Monday, September 7, 2009

தொடாச்சிணுங்கி

தொட்டவுடன்
சிணுங்கும்
தொட்டாச் சிணுங்கியே
தொட்டால்
ஏன்
சிணுங்குகின்றாய்



தொடாமல்
பசியால்
சிணுங்கும்
சுருங்கும்
அகதிகளின் குடல்கள்
குழந்தைகளின்
வயிறுகள்
ஆயிரமாயிரம்
அறியாயோ ?

என்ன
செய்யப் போகிறாய்

Tuesday, August 18, 2009

சோனி

சோனி,
உதட்டோடு உறவாடி
உள்ளதை உள்ளபடியே
பிரதிபலித்தாயே
உமக்கா இக்கதி..?

ஈராண்டுகள் மட்டும்
என்னோடு பேசி
இன்று
கீழே விழுந்து
உயிர்க்குலைந்தாயே

தெளிவான குரல்
சொன்னதை சொன்னபடியே
உச்சரிப்புக் குறையாமல்
எதிரொலிக்கும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்

சோனி
உன்னையன்றி
வேறு யாரையும்
கைப்பிடிக்க
என் மனம் இடம் தரா

எவ்வளவு
செலவானாலும்
குணப்படுத்தி
மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே

Tuesday, August 11, 2009

ஓ.. சுதந்திரத் தந்தையே...




ஓ..
சுதந்திரத் தந்தையே

சுதந்திரத்தை வாங்கி
கையோடு
கொண்டு சென்றாய்
தந்திரத்தை அல்லவா
விட்டுச் சென்றாய்



குள்ளநரி மனித
மத ,பதவி
இனப் போராட்டங்கள்
இன்னும்
ஓய்ந்தப் பாடில்லை


சுதந்திரத் தந்தையே

உயிர் பெற்று வா
சுதந்திரத்தைக்
கொடுத்துவிட்டு
தந்திரத்தை
எடுத்துச் செல்

சுதந்திரப் போர்வையில்
சதிராடும் செயல்கள்
அமைதிப் போராட்டங்கள்
அமர்க்களமாய்
சந்தி சிரிக்கின்றன

உயிர் பெற்று வா

Friday, August 7, 2009

பெண் ஓர் இனிப்பான விஷம்



அன்று
காதலில்
நான்
கரும்பானேன்



இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்

தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை

எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......

Wednesday, August 5, 2009

குழிக்குள் தங்கம்


குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?


தங்கத்தை
எடுத்து
உரியவரிடம்
சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான்
பிரசினை முடிந்தது
ஆனால் இன்று
நடப்பதோ வேறு

குழிக்கு வெளியே
தங்கத்தைப் பற்றிய
ஆய்வு
யாருக்குச் சொந்தம்
எனபதில் குழப்பம்

இப்படியோ
அப்படியோ என
வீண் விவாதம்

விட்டுகொடுக்காத
முடிவுகள்

வாய்ப் பேச்சு
கைகலப்பில் முடிவு

இறுதியில்
குழிக்குள் ஒருவன் விழ
மற்றவர்கள் நகைப்பு

இன்றைய
நாட்டு நடப்பில்
நம்மிடையே காணும்
நடைமுறை வழக்கம்
இதுதான்

பிரசினைகளைச் சுலபமாக
தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் பேசியே
காலத்தைக்
கழிக்கின்றோம்

தங்கம் இன்னும்
குழியிலேயே
இருப்பது போல...

நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...

உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....

Tuesday, August 4, 2009

ஏனய்யா வம்பு ?




ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை




ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை

ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை

ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை

ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி

புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை

ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......