Thursday, December 2, 2010

டத்தோ கோ.பழனிவேல் அவர்களே


நினைத்துப்பார்க்கின்றேன்

சாதனைத் தலைவரின் வாரிசே
சரித்திரம் படைக்கவிருக்கும்
தேசிய தலைவரே
டத்தோ கோ.பழ்னிவேல் அவர்களே

பிறந்த நாள் வாழ்த்துகள்


இதயத்து ஈரத்திலிருந்து
வாழ்த்துகின்றேன் -வெற்றி உமதே
தொகுதி,மாநிலம்,நாடு என ஆற்றிய
தொண்டினை நினைத்துப்பார்க்கின்றேன்

இரவின் மடியில்
உலகம் தூங்கியபோதும்
நீர் மட்டும் கண் விழித்தீர்
மக்களுக்காக சிந்தித்தீர்

தள்ளாடும் சமுதாயம்
தலை நிமிர
தேசியத் தலைவருக்கு
தோள் கொடுத்தீர்

நீர் வழங்கிய மான்யமோ
ஆயிரமாயிரம்
செயல் திறனைச் சொல்ல
சொற்களைத் தேடுகின்றேன்

தமிழ்ப்பள்ளிகளுக்கும்
கோவில்களுக்கும்
பேசும் சக்தி இருந்தால்
உன் போராட்டத்தில்
பிரச்சாரப் பீரங்கிகளாக
வெடித்திருக்கும்

உன் எதிரிகள் உம்மை வீழ்த்த
உன்னைச் சுற்றியே
தருணம் பார்த்து
காத்துக் கொண்டிருகிறார்கள்

உமக்குப் புரியாததா
அல்லது தெரியாததா
அரசியல் உமக்கு அல்வா
அமைதியாகவே
அடக்கி விடுவாய்
எனபது தெரியும்

நீர் உன் தமிழை மட்டும்
உயர்த்திக் கொள்
அதுவே உன் பலஹீனம்
உன்னைக் கவிழ்க்க
அதுதானே எதிரிகளுக்கு
ஆயுதம்

நீர் வீழமாட்டாய்
அய்யன் துணை இருக்கும்வரை
உன் நிழலில் நிச்சயம்
நம் சமுதாயம் உயரும்


யானையின் பலமில்லை உம்மிடம்
சிங்கத்தின் சீற்றமில்லை உம்மிடம்
புலியின் வேகமில்லை உம்மிடம்
ஆனால்
வேகமும் விவேகமும் திறமையும்
அய்யனின் அருளும் உண்டு

தேசியத்தலைவரே
வாழ்த்துகின்றேன்.
வாழ்க பல்லாண்டு !