Thursday, November 26, 2009
தலைவரைத் தேடுகின்றேன்
மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திட
வேண்டுமய்யா
தனித்துவாழ்
பெண்மணியாய்
வாழ்ந்திட என்ன
வரம் பெற்றேனய்யா
குழந்தைகளைக்
கரைச் சேர்க்க
கடன் கேட்டு அலைந்த
கட்சித் தலைவர்கள்
ஏராளம்
கை நீட்டி வழி காட்டும்
தலைவர்களைக் கண்டேன்
குறைக் கேட்டு
கைக் கொடுத்து
கரை சேர்க்கும்
தலைவர்களை
ஒருவரையும்
காணவில்லை
தேடுகிறேன்
கிடைக்கவில்லை
(இது ஓர் உண்மையின் புலம்பல்)
தனித்து வாழ் தாய்மார் ஒருவர் பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்டு தன் கதையை கண்ணீர்வழி வடித்த உண்மைச் சம்பவம்.பத்திரிக்கையில் சந்தித்தவர்களையும் ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவிப்பேன் என்று மனவேதனையோடு கூறினார்.)
Tuesday, October 27, 2009
Tuesday, October 13, 2009
தீபாவளி நினைவலைகள்
திருநாள்
அதோ வருகிறது பார்
கோழிக்கறி அங்கே
இட்டிலியும் இங்கே
சுவைத்து சுவைத்து
சாப்பிடலாம் வா”
அன்று தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பெரியோர்களும் தீபாவளி காலங்களில் உதிர்த்த வசனங்களை நினத்துப்பார்க்கின்றேன்.
எத்துணை சுகம்!
தீபாவளிக்கு சட்டை வாங்கியாச்சா ?
ஒரு உடுப்புதான் அப்பா வாங்கினாரு....
இன்னைக்குப் போய் எங்க தங்கைச்சிக்கு,அண்ணனுக்கு,அக்காவுக்கு வாங்குவாரு!
பட்டாசு நேத்திக்கு கொஞ்சம் வாங்கிட்டோம்
தீபாவளிக்கு முத நாளு முச்சந்தி கடையிலே ரொம்ப வாங்கலாம்னு அப்பா சொன்னாரு.
அப்பா வாங்கின 007 சட்டை சின்னதா இருக்கு..
அப்புறம் போய் மாத்தணும்
டேய் இராமசாமி உங்க அப்பாகிட்ட சொல்லு.. கந்தாயி மாமாவுக்கு
இந்த ஆட்டை கூறு போடும்போது மூணு கூறு கேட்டாருன்னு சொல்லு.
தொடைபகுதியா வேணும்னு சொல்லு.
அப்புறம் காசு தருவாருன்னு சொல்லு. சரியா....அவருக்குத் தெரியும்
சரி...சரி....சொல்றேன்
டேய் எம்.ஜி.ஆர்,சிவாஜி இரண்டும் படம் ஓடுது.எதற்குடா போறே ?
முத நாளு எம்.ஜி ஆர். படம்.அப்புறம் சிவாஜி படம்.
அடுத்த நாள் கோலாலம்பூருக்கு போய் அங்க ஒரு படம் பார்க்கலாம்.
கண்ணாவையும் கேளுடா வந்தா எல்லாரும் போலாம்.
தீபாவளிக்கு காலையிலேயே வந்துடு.நம்ம வீட்லேதான் பசியாற.அப்புறம் உன் வீடு.முடிஞ்சதும் குப்பு வீட்டுக்குன்னு ஒரு வட்டம் போடலாம். மறந்திடாதே
இன்னும் ஒரு நாள்தான் இருக்கு தீபாவளிக்கு.பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு உடுப்புகூட வாங்கலே.கடைக்கார்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்கிட்டு வர்ரேன் புள்ளே.அப்புறம் கொடுக்கலாம். (தந்தையின் தவிப்பு)
தீபாவளி வந்துட்டா போதும்.இவங்க தொல்லை தாங்கலே.
வெடிடா நல்லா வெடிடா பேய் பிசாசு எல்லாம் ஓடுணும்.
பக்கத்துலே கேக்கிற சத்தத்தைவிட ரொம்ப சத்தம் வரணும்
தீபாவளிக் கார்ட்டெல்லாம் ஒட்டுங்கடா.டேய் மாமாவோட கார்டை மேலே ஒட்டுங்க.இல்லேனா மாமா வந்தா பார்த்துட்டு ஏசுவாரு.
இந்த வருஷம் கார்டு குறஞ்சிருக்கு.ஏண்டா......
அனுப்பின எல்லோருக்கும் கார்டு அனுப்பிட்டிங்களா. நாளைக்கு ஒரு சொல்லு வராதபடி பார்த்துக்கொங்க.
ஏண்டி லட்சுமி இப்போ போய் சொல்ற ..தம்பியை கூப்பிடு.டேய் விக்கி கடை தொறந்து இருந்தா ஒரு கா கட்டி மிளகா தூள் வாங்கிட்டு வா.அப்பா பேரை சொல்லு.
சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் கவலைப்படாதே.உங்க அப்பா கண்டிப்பா பித்தளைச் சங்கிலி வாங்கிட்டு வந்திடுவாரு.நாளைக்குத்தானே தீபாவளி.
முதலே சீயக்காய் சவர்க்காரம் எடுத்து மூலையிலே வை.
பலகாரத்தை சாப்பிடாதிங்க. முதல்ல சாமிக்கு படையல் போடணும்.டேய்..டேய் சொன்னா கேக்க மாட்டிங்களே !நீயும் அப்படித்தான் உங்க அக்காவும் அப்படித்தான்
அம்மா...கண்ணு எரியுதம்மா..போதும்மா..தண்ணி ஊத்துங்கம்மா....
நல்லா எண்ணே தேச்சு குளிக்கணும்டா....
நான் மறந்துவிட்டதை நீங்கள் நினைவு கூறுங்களேன்.மகிழ்வோம்.
தீபாவளி வாழ்த்துகள்
(இப்பொழுது நாகரிகச் சூழலில் சுகமான இந்த வசனங்கள் மறைந்து சிக்கனம் என்ற போர்வையில் மகிழ்ச்சி போலி நடனம் ஆடுகின்றது)
Saturday, September 26, 2009
உன்னைப் போல் ஒருவன்
நீ நல்லவரா
கெட்டவரா
நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை
சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்
நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்
சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்
சிரிப்பின் பொருள்
புரியவில்லை
வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்
சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை
கொடுப்பார் அல்லவா
சுயநலம்
Friday, September 25, 2009
இறப்பதை விட
Monday, September 7, 2009
தொடாச்சிணுங்கி
Tuesday, August 18, 2009
சோனி
உதட்டோடு உறவாடி
உள்ளதை உள்ளபடியே
பிரதிபலித்தாயே
உமக்கா இக்கதி..?
ஈராண்டுகள் மட்டும்
என்னோடு பேசி
இன்று
கீழே விழுந்து
உயிர்க்குலைந்தாயே
தெளிவான குரல்
சொன்னதை சொன்னபடியே
உச்சரிப்புக் குறையாமல்
எதிரொலிக்கும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்
சோனி
உன்னையன்றி
வேறு யாரையும்
கைப்பிடிக்க
என் மனம் இடம் தரா
எவ்வளவு
செலவானாலும்
குணப்படுத்தி
மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே
Tuesday, August 11, 2009
ஓ.. சுதந்திரத் தந்தையே...
ஓ..
சுதந்திரத் தந்தையே
சுதந்திரத்தை வாங்கி
கையோடு
கொண்டு சென்றாய்
தந்திரத்தை அல்லவா
விட்டுச் சென்றாய்
குள்ளநரி மனித
மத ,பதவி
இனப் போராட்டங்கள்
இன்னும்
ஓய்ந்தப் பாடில்லை
ஓ
சுதந்திரத் தந்தையே
உயிர் பெற்று வா
சுதந்திரத்தைக்
கொடுத்துவிட்டு
தந்திரத்தை
எடுத்துச் செல்
சுதந்திரப் போர்வையில்
சதிராடும் செயல்கள்
அமைதிப் போராட்டங்கள்
அமர்க்களமாய்
சந்தி சிரிக்கின்றன
உயிர் பெற்று வா
Friday, August 7, 2009
பெண் ஓர் இனிப்பான விஷம்
Wednesday, August 5, 2009
குழிக்குள் தங்கம்
இறுதியில்
Tuesday, August 4, 2009
ஏனய்யா வம்பு ?
ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை
ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை
ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை
ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை
ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி
புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை
ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......
Tuesday, July 28, 2009
சொல்லுக்குள் சொல்
Monday, July 27, 2009
சூரிய ஒளி
Sunday, July 26, 2009
பாலர் பள்ளி அமைக்க
வானம் அழ
Friday, July 24, 2009
நெஞ்சு வலிக்குதய்யா
(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)
பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு
'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று
உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று
வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்
வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்
பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு
குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று
பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று
சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்
சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது
நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்
இன்னும் எத்துணை
நாட்களுக்கு................
ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா
பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு
உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்
கண்ணீருடன்..
Thursday, July 23, 2009
பிணமாகும் நாம்..
Tuesday, July 14, 2009
சிலந்தி வலை
மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா
அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே
நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்
ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே
Monday, June 15, 2009
தாலி தேவையா.. ? (கற்பனையல்ல..)
என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"தாலி தேவையா..? தாலி கட்டாமல் வாழ முடியாதா ?
இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். மதமின்றி மனிதனாக வாழ வேண்டும்" என வயதிற்கு முதிர்ந்த விவாதத்தில் ஈடுபட்டான்.
நான் அதிர்ந்து போனேன்.இருப்பினும் இயன்ற மட்டும் இளைஞனைத் திருப்தி படுத்த விளக்கம் கொடுத்தேன்.நிறைவு பெறாமலே இளைஞன் சென்றுவிட்டான்.
யோசிக்கின்றேன்.
இவரைப் போல் சிந்தனையுடைய சில இளைஞர்களுக்கு
யார் மனதையும் புண்படுத்தாத வகையில்
நல்லதொரு தெளிவான விளக்கத்தை ஆன்மீகவாளர்கள்,சிந்தனையாளர்கள் பதில் கூற விரும்பினால் சிறப்பு.
எதிர்ப்பார்க்கின்றேன்..
Thursday, June 11, 2009
Tuesday, June 9, 2009
அறமே நீயுமா ?
Monday, June 8, 2009
தமிழே ! கலைஞரே !
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
கறுப்பு தான்..........
Sunday, June 7, 2009
ஊக்கம்
Monday, June 1, 2009
நீயுமா ?
விலைவாசி ஏற்றம்
சிக்கல்வாசி சீற்றம்
இயலாமையின்
குறுக்குவழி
தற்கொலை!
இருபது அடி உயரத்தில்
தூக்கில் தொங்கினான்
சாகவில்லை!
நோக்கினான்
சிரித்தது தூக்குக்கயிறு.
விலைவாசி மட்டுமா
எல்லாவற்றிலும் ஏற்றம்
ஏன் என்னை மட்டும்
ஏற்றவில்லை
என்னையும் ஏற்று !
ஏற்று
இருபதை
முப்பதாக்கு
உன்னை நான்
ஏற்றுக்கொள்கிறேன்!
வாயைத் திறந்தான்
இன்னும் மூடவில்லை!