Thursday, November 26, 2009

தலைவரைத் தேடுகின்றேன்


மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திட
வேண்டுமய்யா



தனித்துவாழ்
பெண்மணியாய்
வாழ்ந்திட என்ன
வரம் பெற்றேனய்யா

குழந்தைகளைக்
கரைச் சேர்க்க
கடன் கேட்டு அலைந்த
கட்சித் தலைவர்கள்
ஏராளம்
கை நீட்டி வழி காட்டும்
தலைவர்களைக் கண்டேன்

குறைக் கேட்டு
கைக் கொடுத்து
கரை சேர்க்கும்
தலைவர்களை
ஒருவரையும்
காணவில்லை

தேடுகிறேன்
கிடைக்கவில்லை

(இது ஓர் உண்மையின் புலம்பல்)
தனித்து வாழ் தாய்மார் ஒருவர் பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்டு தன் கதையை கண்ணீர்வழி வடித்த உண்மைச் சம்பவம்.பத்திரிக்கையில் சந்தித்தவர்களையும் ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவிப்பேன் என்று மனவேதனையோடு கூறினார்.)

Tuesday, October 27, 2009

இரத்த உறிஞ்சிகள்


வியர்வை சிந்தி
உழைத்த பணம்
சிரிப்புடன்
வட்டி முதலையின்
பையில்

Tuesday, October 13, 2009

தீபாவளி நினைவலைகள்

தீபாவளி தீபாவளி
திருநாள்
அதோ வருகிறது பார்
கோழிக்கறி அங்கே
இட்டிலியும் இங்கே
சுவைத்து சுவைத்து
சாப்பிடலாம் வா”

அன்று தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பெரியோர்களும் தீபாவளி காலங்களில் உதிர்த்த வசனங்களை நினத்துப்பார்க்கின்றேன்.
எத்துணை சுகம்!

தீபாவளிக்கு சட்டை வாங்கியாச்சா ?
ஒரு உடுப்புதான் அப்பா வாங்கினாரு....
இன்னைக்குப் போய் எங்க தங்கைச்சிக்கு,அண்ணனுக்கு,அக்காவுக்கு வாங்குவாரு!



பட்டாசு நேத்திக்கு கொஞ்சம் வாங்கிட்டோம்
தீபாவளிக்கு முத நாளு முச்சந்தி கடையிலே ரொம்ப வாங்கலாம்னு அப்பா சொன்னாரு.

அப்பா வாங்கின 007 சட்டை சின்னதா இருக்கு..
அப்புறம் போய் மாத்தணும்

டேய் இராமசாமி உங்க அப்பாகிட்ட சொல்லு.. கந்தாயி மாமாவுக்கு
இந்த ஆட்டை கூறு போடும்போது மூணு கூறு கேட்டாருன்னு சொல்லு.
தொடைபகுதியா வேணும்னு சொல்லு.
அப்புறம் காசு தருவாருன்னு சொல்லு. சரியா....அவருக்குத் தெரியும்
சரி...சரி....சொல்றேன்

டேய் எம்.ஜி.ஆர்,சிவாஜி இரண்டும் படம் ஓடுது.எதற்குடா போறே ?
முத நாளு எம்.ஜி ஆர். படம்.அப்புறம் சிவாஜி படம்.
அடுத்த நாள் கோலாலம்பூருக்கு போய் அங்க ஒரு படம் பார்க்கலாம்.
கண்ணாவையும் கேளுடா வந்தா எல்லாரும் போலாம்.

தீபாவளிக்கு காலையிலேயே வந்துடு.நம்ம வீட்லேதான் பசியாற.அப்புறம் உன் வீடு.முடிஞ்சதும் குப்பு வீட்டுக்குன்னு ஒரு வட்டம் போடலாம். மறந்திடாதே

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு தீபாவளிக்கு.பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு உடுப்புகூட வாங்கலே.கடைக்கார்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்கிட்டு வர்ரேன் புள்ளே.அப்புறம் கொடுக்கலாம். (தந்தையின் தவிப்பு)

தீபாவளி வந்துட்டா போதும்.இவங்க தொல்லை தாங்கலே.

வெடிடா நல்லா வெடிடா பேய் பிசாசு எல்லாம் ஓடுணும்.
பக்கத்துலே கேக்கிற சத்தத்தைவிட ரொம்ப சத்தம் வரணும்

தீபாவளிக் கார்ட்டெல்லாம் ஒட்டுங்கடா.டேய் மாமாவோட கார்டை மேலே ஒட்டுங்க.இல்லேனா மாமா வந்தா பார்த்துட்டு ஏசுவாரு.
இந்த வருஷம் கார்டு குறஞ்சிருக்கு.ஏண்டா......

அனுப்பின எல்லோருக்கும் கார்டு அனுப்பிட்டிங்களா. நாளைக்கு ஒரு சொல்லு வராதபடி பார்த்துக்கொங்க.

ஏண்டி லட்சுமி இப்போ போய் சொல்ற ..தம்பியை கூப்பிடு.டேய் விக்கி கடை தொறந்து இருந்தா ஒரு கா கட்டி மிளகா தூள் வாங்கிட்டு வா.அப்பா பேரை சொல்லு.

சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் கவலைப்படாதே.உங்க அப்பா கண்டிப்பா பித்தளைச் சங்கிலி வாங்கிட்டு வந்திடுவாரு.நாளைக்குத்தானே தீபாவளி.
முதலே சீயக்காய் சவர்க்காரம் எடுத்து மூலையிலே வை.

பலகாரத்தை சாப்பிடாதிங்க. முதல்ல சாமிக்கு படையல் போடணும்.டேய்..டேய் சொன்னா கேக்க மாட்டிங்களே !நீயும் அப்படித்தான் உங்க அக்காவும் அப்படித்தான்

அம்மா...கண்ணு எரியுதம்மா..போதும்மா..தண்ணி ஊத்துங்கம்மா....
நல்லா எண்ணே தேச்சு குளிக்கணும்டா....


நான் மறந்துவிட்டதை நீங்கள் நினைவு கூறுங்களேன்.மகிழ்வோம்.
தீபாவளி வாழ்த்துகள்


(இப்பொழுது நாகரிகச் சூழலில் சுகமான இந்த வசனங்கள் மறைந்து சிக்கனம் என்ற போர்வையில் மகிழ்ச்சி போலி நடனம் ஆடுகின்றது)

Saturday, September 26, 2009

உன்னைப் போல் ஒருவன்

உலகநாயகனே
நீ நல்லவரா
கெட்டவரா

நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை

சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்

நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்

சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்

சிரிப்பின் பொருள்
புரியவில்லை

வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்

சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை

கொடுப்பார் அல்லவா
சுயநலம்

Friday, September 25, 2009

இறப்பதை விட



மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !

இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே

இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !

இறப்பதைவிட
இருப்பது மேல்

இது ஓர்
உண்மை உரையாடல்

Monday, September 7, 2009

தொடாச்சிணுங்கி

தொட்டவுடன்
சிணுங்கும்
தொட்டாச் சிணுங்கியே
தொட்டால்
ஏன்
சிணுங்குகின்றாய்



தொடாமல்
பசியால்
சிணுங்கும்
சுருங்கும்
அகதிகளின் குடல்கள்
குழந்தைகளின்
வயிறுகள்
ஆயிரமாயிரம்
அறியாயோ ?

என்ன
செய்யப் போகிறாய்

Tuesday, August 18, 2009

சோனி

சோனி,
உதட்டோடு உறவாடி
உள்ளதை உள்ளபடியே
பிரதிபலித்தாயே
உமக்கா இக்கதி..?

ஈராண்டுகள் மட்டும்
என்னோடு பேசி
இன்று
கீழே விழுந்து
உயிர்க்குலைந்தாயே

தெளிவான குரல்
சொன்னதை சொன்னபடியே
உச்சரிப்புக் குறையாமல்
எதிரொலிக்கும் உன் திறன்
வேறு யாருக்கு வரும்

சோனி
உன்னையன்றி
வேறு யாரையும்
கைப்பிடிக்க
என் மனம் இடம் தரா

எவ்வளவு
செலவானாலும்
குணப்படுத்தி
மீண்டும் உன்னையே
கரம் பிடிப்பேன்
கவலைப்படாதே

Tuesday, August 11, 2009

ஓ.. சுதந்திரத் தந்தையே...




ஓ..
சுதந்திரத் தந்தையே

சுதந்திரத்தை வாங்கி
கையோடு
கொண்டு சென்றாய்
தந்திரத்தை அல்லவா
விட்டுச் சென்றாய்



குள்ளநரி மனித
மத ,பதவி
இனப் போராட்டங்கள்
இன்னும்
ஓய்ந்தப் பாடில்லை


சுதந்திரத் தந்தையே

உயிர் பெற்று வா
சுதந்திரத்தைக்
கொடுத்துவிட்டு
தந்திரத்தை
எடுத்துச் செல்

சுதந்திரப் போர்வையில்
சதிராடும் செயல்கள்
அமைதிப் போராட்டங்கள்
அமர்க்களமாய்
சந்தி சிரிக்கின்றன

உயிர் பெற்று வா

Friday, August 7, 2009

பெண் ஓர் இனிப்பான விஷம்



அன்று
காதலில்
நான்
கரும்பானேன்



இன்று
மாற்றானை
கைப்பிடிக்க
கறிவேப்பிலையானேன்

தேவையின் போது
பயன்படுத்தி
தேவையற்ற போது
தூக்கி எறியப்பட்ட
கறிவேப்பிலை நிலை

எனவேதான்
பெண் ஓர்
இனிப்பான விஷம்
எனக்கு மட்டும் .......

Wednesday, August 5, 2009

குழிக்குள் தங்கம்


குழிக்குள்
தங்கம்
யாருக்குச்
சொந்தம்..?


தங்கத்தை
எடுத்து
உரியவரிடம்
சேர்க்க வேண்டும்
அவ்வளவுதான்
பிரசினை முடிந்தது
ஆனால் இன்று
நடப்பதோ வேறு

குழிக்கு வெளியே
தங்கத்தைப் பற்றிய
ஆய்வு
யாருக்குச் சொந்தம்
எனபதில் குழப்பம்

இப்படியோ
அப்படியோ என
வீண் விவாதம்

விட்டுகொடுக்காத
முடிவுகள்

வாய்ப் பேச்சு
கைகலப்பில் முடிவு

இறுதியில்
குழிக்குள் ஒருவன் விழ
மற்றவர்கள் நகைப்பு

இன்றைய
நாட்டு நடப்பில்
நம்மிடையே காணும்
நடைமுறை வழக்கம்
இதுதான்

பிரசினைகளைச் சுலபமாக
தீர்க்க வழி இருந்தும்
தீர்க்காமல் பேசியே
காலத்தைக்
கழிக்கின்றோம்

தங்கம் இன்னும்
குழியிலேயே
இருப்பது போல...

நானும் இன்னும்
எடுக்காமல்
இவ்வளவு நீளம்
எழுதிவிட்டேனே...

உங்களில் நானும்
ஒருவன்
அதனால்தான்
என்னவோ....

Tuesday, August 4, 2009

ஏனய்யா வம்பு ?




ஒரு கட்சியில்
சேர்ந்து
மக்களுக்கு
சேவை செய்ய
ஆசை




ம.இ.காவில்
சாமிவேலு -சுப்ரா
ஓய்ந்தபாடில்லை
கூட வளர்ந்த சோதியே
எதிரியான நிலை

ம.மு.க.வில்
கேவியஸ் -முருகையா
தூறல் நிற்கவில்லை
வளரும் இளந்தலைவனை
ஒழித்துக் கட்டும் நிலை

ஐ.பி.எப்.பில்
நீயா நானா
தலைவர் போராட்டம்
பண்டிதனுக்கும் பின்
பதிவு ரத்தாகுமோ நிலை

ஹிண்ட்ராப்
உரிமைக்குரல் கொடுத்த
நேற்றையப் போராட்டவாதிகள்
இன்று அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு கட்சி

புதிய கட்சிகள்
அறிக்கைகளோடு சரி
செயல் பாடு காணோம்
நாளைய நிலை
புரியவில்லை

ஏனய்யா வம்பு ?
தனியாக உழைத்து
குடும்பத்தை உயர்த்தி
தன்னிச்சையாக
உதவுவோமே.......

Tuesday, July 28, 2009

சொல்லுக்குள் சொல்


வார்த்தைக்குள் வார்த்தை
விடையைத் தந்தது
மழைக்குக் குடை
கைப்பிடியைப் போல்

நிம்மதி
மதியால் தேடு
வாழ்க்கை
கையால் தேடு
தொடங்கி விட்டேன்
தொடர்ந்து கூறு
எமக்குள் சில
உம்மிடம் பல

கண்டுபிடி
காட்சிப் பொருளாக்கு
கண்விழித்து
காத்திருக்கின்றேன்.




Monday, July 27, 2009

சூரிய ஒளி



உன் பார்வையில்
உலகம் ஒளிர் விட்டு
பிரகாசிக்கிறதே
எப்படி





வானத்தை பார்த்து
நிலா சொன்னது
அது என் ஒளியல்ல
சூரியனின் ஒளி


மனைவி புன்னகையோடு
கணவனைப் பார்த்தாள்
அவள் முகத்தில்
சூரிய ஒளி

Sunday, July 26, 2009

பாலர் பள்ளி அமைக்க


மலேசியத் தமிழ் அற வாரியம் 14-02-2003 ல் தனித்தன்மையுடன் சமூக மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.தமிழ்க் கல்வியைக் கருப்பொருளாக கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பாடு காண பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பாலர் பள்ளித்திட்டத்தையும் அதன் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தி வருகின்றது.

2006ல் தொடங்கி 9 பாலர் பள்ளிகளை தேர்வு செய்து,தேவையான வகுப்பறைத் தளவாடப் பொருட்கள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

தற்பொழுது 2009ல் 14 பாலர் பள்ளிகளுக்கு மலேசியத் தமிழ் அறவாரியம் ஆதரவு வழங்கி வருகின்றது.


01.தமிழ்ப்பள்ளி எடின்பெர்க் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி சிகாம்புட் பாலர் பள்ளி
03.தமிழ்ப்பள்ளி அப்பர் பாலர் பள்ளி
04.தமிழ்ப்பள்ளி மேரு சாலை,கிள்ளான் பாலர் பள்ளி
05.தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசாலை,சுங்கை சிப்புட்,பாலர் பள்ளி.
06.தமிழ்ப்பள்ளி தம்புசாமி செந்தூள் பாலர் பள்ளி.
07.தமிழ்ப்பள்ளி மிட்லேண்ட்ஸ் பாலர் பள்ளி
08.தமிழ்ப்பள்ளி புக்கிட் ஜாலில் பாலர் பள்ளி
09.தமிழ்ப்பள்ளி செமெந்தான் மெந்தகாப்.பகாங்,பாலர் பள்ளி
10.தமிழ்ப்பள்ளி எடென்செர் மெந்தகாப்,பகாங்,பாலர் பள்ளி
11.தமிழ்ப்பள்ளி மெந்தகாப் தோட்டம்,பகாங்,பாலர் பள்ளி
12.சுப்ரமணியர் ஆலயம் பண்டார் சன்வே,பாலர் பள்ளி
13.கரு மாரியம்மன் ஆலயம்,சிரம்பான்,பாலர் பள்ளி
14.பால தபாவனம் ஆசிரமம் பாடாங் ஜாவா,பாலர் பள்ளி


புதிதாக தொடங்கவிருக்கும் பாலர் பள்ளிகள்

01.தமிழ்ப்பள்ளி பாசிர் கூடாங்,ஜோகூர் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி ரிவர்சைட் தோட்டம்,கோல சிலாங்கூர்,பாலர் பள்ளி

இதனை மேலும் 25 ஆக பாலர் பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்.

பாலர் பள்ளிகள் நடத்திவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,கோயில் நிர்வாகம்,தனி இயக்கங்கள் மலேசியத் தமிழ் அற வாரியத்தின் ஆதரவுடன் செயல்பட விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்வதை வரவேற்கின்றோம்.

தொடர்புக்கு : சு.காந்தியப்பன். பி.பி.என். -012-6475135
(பாலர் பள்ளி ஒருங்கிணைப்பாள்ர்)
அலுவலகம் :03-26926533

மலேசியத் தமிழ் அறவாரியம் எவ்வகையில் உதவ முடியும் ?
01. ஒரு புதிய வகுப்பறை கட்டுவதற்கு
02. தேவையான புத்தகங்கள் / மேசைகள் / நாற்காலிகள்
03. தேவையான விளையாட்டுப் பொருட்கள்
04. படிப்பதற்கு தேவையான உபகரங்கள்
05. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்
06. பாலர் பள்ளியின் மேற்பார்வை,கண்காணிப்பு சேவையை
மலேசியத் தமிழ் அறவாரியம் வழங்கும்

நடைபெற்ற நிகழ்வுகள்

2008
கடந்த 09-11-2008 ல் மதிய மணி 2.00 முதல் மாலை மணி 6.00 வரை
தான்சிறி கே.ஆர்.சோமா அரங்கம்,விஸ்மா துன் சம்பந்தன்,கோலாலம்பூரில்
பாலர் பள்ளி மாணவர்களின் கலை விழா'அரும்புகளின் அற்புதங்கள்' சிறப்பாக நடைபெற்றது.


2009

01. பொங்கல் விழா ( ஜனவரி)
02.திருமுறை / திருக்குறள் போட்டிகள் (மே)
03.வசந்த விழா (ஜூன்)
04.கல்விக் கருத்தரங்கு (ஜூலை)
கல்விச் சுற்றுலா - கேமரன் மலை
05.பாலர் பள்ளி கலை விழா (நவம்பர்)

வானம் அழ


வானம் அழ
பயிர்கள் சிரிக்க
ஒருவர் தியாகம்
பிறர் வாழ்க்கை


உன் பெற்றோர்க்காக
உன் உடன் பிறப்பிற்காக
உன் குடும்பத்திற்காக
உன் நாட்டிற்காக


உன் தாய்க்காக
உன் தாய்மொழிக்காக
உன் தமிழுக்காக
உன் உயிர்மூச்சை


இளைஞனே
நீ தியாகம் செய்
நாளை
நீ சரித்திரம்


Friday, July 24, 2009

நெஞ்சு வலிக்குதய்யா



(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)



பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு

'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று

உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று

வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்

வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்

பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு

குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று

பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று

சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்

சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது

நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்

இன்னும் எத்துணை
நாட்களுக்கு................

ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா

பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு

உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்

கண்ணீருடன்..

Thursday, July 23, 2009

பிணமாகும் நாம்..




பிணமாகும் நாம்
புரிந்தும்
புரியாதவர்போல்
பணத்தைத் தேடி
போராடுவதாக
நினைத்து
நடைப்பிணமாய்
அலையும் நாட்களே
இன்றைய
மனித வாழ்க்கை

நமக்குப் பின்
நம் அடிச்சுவடு
நம்மை
நினைவுப் படுத்தலே
என்றும் நிலைக்கும்
வாழ்க்கை - யோசி

Tuesday, July 14, 2009

சிலந்தி வலை


இளைஞனே
ஒன்றும் தெரியாத
புரியாத ஈக்கள்
மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.

ஓர் இடுகையில்
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா

அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே

நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்

ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே

Monday, June 15, 2009

தாலி தேவையா.. ? (கற்பனையல்ல..)

இருபத்தைந்து வயது இளைஞன். நல்ல பண்பாளன்.நிறைய கதைப் புத்தகங்களையும் நாவல்களையும் படித்தவன்.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"தாலி தேவையா..? தாலி கட்டாமல் வாழ முடியாதா ?
இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம். மதமின்றி மனிதனாக வாழ வேண்டும்" என வயதிற்கு முதிர்ந்த விவாதத்தில் ஈடுபட்டான்.
நான் அதிர்ந்து போனேன்.இருப்பினும் இயன்ற மட்டும் இளைஞனைத் திருப்தி படுத்த விளக்கம் கொடுத்தேன்.நிறைவு பெறாமலே இளைஞன் சென்றுவிட்டான்.

யோசிக்கின்றேன்.

இவரைப் போல் சிந்தனையுடைய சில இளைஞர்களுக்கு
யார் மனதையும் புண்படுத்தாத வகையில்
நல்லதொரு தெளிவான விளக்கத்தை ஆன்மீகவாளர்கள்,சிந்தனையாளர்கள் பதில் கூற விரும்பினால் சிறப்பு.

எதிர்ப்பார்க்கின்றேன்..

Thursday, June 11, 2009

பணம்

கையில்
காசில்லை
என் நிழல் கூட
மதிக்காமல்
என்னை விட்டு
தனியாக
ஓடியது

Tuesday, June 9, 2009

அறமே நீயுமா ?

சூரியன் ஒளி தர
மன்னர் ஆட்சி புரிய
மலை நடு வயலில்
இராகம் அசை போட
பசு ஓய்வின்றி உழைக்க
பயிர்கள் செழித்தோங்க
இதுவரை சரி - உள்ளே

வேலியே பயிரை மேய
வேங்கை மானை விரட்ட
உழைப்போர் ஒதுக்கப் பட
அறமே அலை மோத
சூன்ய மைய சூழலை
மாற்றுவோர் யார் ?




நித்திரை



விழிக்கும்வரை
வித்தியாசமான
தாலாட்டு

Monday, June 8, 2009

அழகு


நிலவே
உன்னை
ஏன் நோக்க
என் மனைவி
என்னருகில் இருக்க

தமிழே ! கலைஞரே !

கலைஞரே!
எண்பத்தாறு வயது
யாரைய்யா சொன்னது?

எழுத்தால் ஆட்சியைப்
பிடித்தவர் நீர் !
உம்மால்
தமிழுக்குப் பெருமை
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
வரையாத ஒவியமா
தொடாத காவியமா

உம் பேனாவின்
மை மட்டும்
எப்படி ஐயா
சரித்திரம் படைக்கின்றது
சொல்லிக் கொடுங்கள்

நீர் ஓர் ஊற்று
அள்ள அள்ள குறையா
அமுத சுரபி
உம்மிடம் கற்றுக் கொள்ள
வாழ்நாள் போதாது

உம் காலத்திலேயே
உம் தமிழை
இரவல் வாங்கி -நாங்கள்
தாளை நனைக்கின்றோம்
அது ஒன்றே போதும்

உம் பேனா முனை
வலிமையைப் போல்
பல்லாண்டு வாழ
இறைவனிடம்
கெஞ்சுகின்றோம் - வாழ்க !





கறுப்பு தான்..........

கறுப்புக்கு
முதல் மரியாதை
கொடுத்தவன் நீர்!

வெள்ளைக்குள்
கறுப்பு முதல்வனாக
நுழைந்தவன் நீர்!

ஒபாமா - நீர்
ஒப்பற்ற மாவீரன்
உயர்வாய்!

உன் வரவால்
வெள்ளை மாளிகை
மின்னுகின்றது

விண்ணும் மண்ணும்
உன்னை வாழ்த்தி
வணங்குகின்றது!

வேட்பாளர்


"அம்மா... தாயே! ! "

எட்டிப் பார்த்தேன்

பிச்சைக்காரனல்ல !

Sunday, June 7, 2009

ஊக்கம்

ஊசலாடும் உயிரைக் கூட
உட்கார வைத்து
நடக்க வைத்து
நிமிர வைத்து
உயர்வான சிந்தனைக்கு
உந்து தள்ளி
ஒய்யாரமாய்
நடை போட வைக்கும்
மாபெரும் சக்தி

சோர்வில்
பிணமாக
நடமாடுவோர் சிலர்

ஊக்கத்தில்
இமயத்தைத்
தொட்டோர் பலர்

நீர்......
எந்த ரகம் ?

Monday, June 1, 2009

நீயுமா ?





விலைவாசி ஏற்றம்

சிக்கல்வாசி சீற்றம்

இயலாமையின்

குறுக்குவழி

தற்கொலை!


இருபது அடி உயரத்தில்

தூக்கில் தொங்கினான்

சாகவில்லை!

நோக்கினான்

சிரித்தது தூக்குக்கயிறு.




விலைவாசி மட்டுமா

எல்லாவற்றிலும் ஏற்றம்

ஏன் என்னை மட்டும்

ஏற்றவில்லை

என்னையும் ஏற்று !


ஏற்று

இருபதை

முப்பதாக்கு

உன்னை நான்

ஏற்றுக்கொள்கிறேன்!


வாயைத் திறந்தான்

இன்னும் மூடவில்லை!

Sunday, May 31, 2009

தீபாவலி

குடிசைக்குள்

திருநாளன்று

தீபாவலிதானே

Friday, May 29, 2009

நம்பிக்கை ஒளி

விழி


இளைஞனே விழி
இளைப்பாறும்
நேரமல்ல !
இடையூறு
இடைவிடாமல்
நிகழ்வதைப் பார்

நீர் விழி - போராடு
இல்லையேல்
இந்திய சமுதாயம்
விழி மூட
நீரும்
காரணியே !

விழி நீர்

பிஞ்சு விரல்
தள்ளாடி தேட
விழி நீரோடு
தெரியாதவள் போல்
தாய் தள்ளிட
பாசம் இல்லை
என்றில்லை
பால் இல்லை
என்பதினால் !

Wednesday, May 27, 2009

நினைத்துப் பார்க்கின்றேன் 1

முதல் வகுப்பில்
முதல் நிலையில் வந்தபொழுது
முந்திக் கொண்டு ஓடி
சொல்லத் துடித்தேன்
கேட்க யாருமில்லை!
இறைவனிடம் சொன்னேன்
தூது சென்றிருப்பார்......
அநாதை