Sunday, July 26, 2009

பாலர் பள்ளி அமைக்க


மலேசியத் தமிழ் அற வாரியம் 14-02-2003 ல் தனித்தன்மையுடன் சமூக மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.தமிழ்க் கல்வியைக் கருப்பொருளாக கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பாடு காண பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பாலர் பள்ளித்திட்டத்தையும் அதன் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தி வருகின்றது.

2006ல் தொடங்கி 9 பாலர் பள்ளிகளை தேர்வு செய்து,தேவையான வகுப்பறைத் தளவாடப் பொருட்கள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

தற்பொழுது 2009ல் 14 பாலர் பள்ளிகளுக்கு மலேசியத் தமிழ் அறவாரியம் ஆதரவு வழங்கி வருகின்றது.


01.தமிழ்ப்பள்ளி எடின்பெர்க் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி சிகாம்புட் பாலர் பள்ளி
03.தமிழ்ப்பள்ளி அப்பர் பாலர் பள்ளி
04.தமிழ்ப்பள்ளி மேரு சாலை,கிள்ளான் பாலர் பள்ளி
05.தமிழ்ப்பள்ளி மகாத்மா காந்தி கலாசாலை,சுங்கை சிப்புட்,பாலர் பள்ளி.
06.தமிழ்ப்பள்ளி தம்புசாமி செந்தூள் பாலர் பள்ளி.
07.தமிழ்ப்பள்ளி மிட்லேண்ட்ஸ் பாலர் பள்ளி
08.தமிழ்ப்பள்ளி புக்கிட் ஜாலில் பாலர் பள்ளி
09.தமிழ்ப்பள்ளி செமெந்தான் மெந்தகாப்.பகாங்,பாலர் பள்ளி
10.தமிழ்ப்பள்ளி எடென்செர் மெந்தகாப்,பகாங்,பாலர் பள்ளி
11.தமிழ்ப்பள்ளி மெந்தகாப் தோட்டம்,பகாங்,பாலர் பள்ளி
12.சுப்ரமணியர் ஆலயம் பண்டார் சன்வே,பாலர் பள்ளி
13.கரு மாரியம்மன் ஆலயம்,சிரம்பான்,பாலர் பள்ளி
14.பால தபாவனம் ஆசிரமம் பாடாங் ஜாவா,பாலர் பள்ளி


புதிதாக தொடங்கவிருக்கும் பாலர் பள்ளிகள்

01.தமிழ்ப்பள்ளி பாசிர் கூடாங்,ஜோகூர் பாலர் பள்ளி
02.தமிழ்ப்பள்ளி ரிவர்சைட் தோட்டம்,கோல சிலாங்கூர்,பாலர் பள்ளி

இதனை மேலும் 25 ஆக பாலர் பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்.

பாலர் பள்ளிகள் நடத்திவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,கோயில் நிர்வாகம்,தனி இயக்கங்கள் மலேசியத் தமிழ் அற வாரியத்தின் ஆதரவுடன் செயல்பட விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்வதை வரவேற்கின்றோம்.

தொடர்புக்கு : சு.காந்தியப்பன். பி.பி.என். -012-6475135
(பாலர் பள்ளி ஒருங்கிணைப்பாள்ர்)
அலுவலகம் :03-26926533

மலேசியத் தமிழ் அறவாரியம் எவ்வகையில் உதவ முடியும் ?
01. ஒரு புதிய வகுப்பறை கட்டுவதற்கு
02. தேவையான புத்தகங்கள் / மேசைகள் / நாற்காலிகள்
03. தேவையான விளையாட்டுப் பொருட்கள்
04. படிப்பதற்கு தேவையான உபகரங்கள்
05. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்
06. பாலர் பள்ளியின் மேற்பார்வை,கண்காணிப்பு சேவையை
மலேசியத் தமிழ் அறவாரியம் வழங்கும்

நடைபெற்ற நிகழ்வுகள்

2008
கடந்த 09-11-2008 ல் மதிய மணி 2.00 முதல் மாலை மணி 6.00 வரை
தான்சிறி கே.ஆர்.சோமா அரங்கம்,விஸ்மா துன் சம்பந்தன்,கோலாலம்பூரில்
பாலர் பள்ளி மாணவர்களின் கலை விழா'அரும்புகளின் அற்புதங்கள்' சிறப்பாக நடைபெற்றது.


2009

01. பொங்கல் விழா ( ஜனவரி)
02.திருமுறை / திருக்குறள் போட்டிகள் (மே)
03.வசந்த விழா (ஜூன்)
04.கல்விக் கருத்தரங்கு (ஜூலை)
கல்விச் சுற்றுலா - கேமரன் மலை
05.பாலர் பள்ளி கலை விழா (நவம்பர்)

No comments: