Saturday, September 26, 2009

உன்னைப் போல் ஒருவன்

உலகநாயகனே
நீ நல்லவரா
கெட்டவரா

நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை

சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்

நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்

சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்

சிரிப்பின் பொருள்
புரியவில்லை

வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்

சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை

கொடுப்பார் அல்லவா
சுயநலம்

No comments: