Sunday, May 31, 2009

தீபாவலி

குடிசைக்குள்

திருநாளன்று

தீபாவலிதானே

Friday, May 29, 2009

நம்பிக்கை ஒளி

விழி


இளைஞனே விழி
இளைப்பாறும்
நேரமல்ல !
இடையூறு
இடைவிடாமல்
நிகழ்வதைப் பார்

நீர் விழி - போராடு
இல்லையேல்
இந்திய சமுதாயம்
விழி மூட
நீரும்
காரணியே !

விழி நீர்

பிஞ்சு விரல்
தள்ளாடி தேட
விழி நீரோடு
தெரியாதவள் போல்
தாய் தள்ளிட
பாசம் இல்லை
என்றில்லை
பால் இல்லை
என்பதினால் !

Wednesday, May 27, 2009

நினைத்துப் பார்க்கின்றேன் 1

முதல் வகுப்பில்
முதல் நிலையில் வந்தபொழுது
முந்திக் கொண்டு ஓடி
சொல்லத் துடித்தேன்
கேட்க யாருமில்லை!
இறைவனிடம் சொன்னேன்
தூது சென்றிருப்பார்......
அநாதை