Showing posts with label துளிப்பா. Show all posts
Showing posts with label துளிப்பா. Show all posts

Monday, June 8, 2009

தமிழே ! கலைஞரே !

கலைஞரே!
எண்பத்தாறு வயது
யாரைய்யா சொன்னது?

எழுத்தால் ஆட்சியைப்
பிடித்தவர் நீர் !
உம்மால்
தமிழுக்குப் பெருமை
நீர் ஓர் ஆழ்கடல்
எழுதாத எழுத்தா
வரையாத ஒவியமா
தொடாத காவியமா

உம் பேனாவின்
மை மட்டும்
எப்படி ஐயா
சரித்திரம் படைக்கின்றது
சொல்லிக் கொடுங்கள்

நீர் ஓர் ஊற்று
அள்ள அள்ள குறையா
அமுத சுரபி
உம்மிடம் கற்றுக் கொள்ள
வாழ்நாள் போதாது

உம் காலத்திலேயே
உம் தமிழை
இரவல் வாங்கி -நாங்கள்
தாளை நனைக்கின்றோம்
அது ஒன்றே போதும்

உம் பேனா முனை
வலிமையைப் போல்
பல்லாண்டு வாழ
இறைவனிடம்
கெஞ்சுகின்றோம் - வாழ்க !





கறுப்பு தான்..........

கறுப்புக்கு
முதல் மரியாதை
கொடுத்தவன் நீர்!

வெள்ளைக்குள்
கறுப்பு முதல்வனாக
நுழைந்தவன் நீர்!

ஒபாமா - நீர்
ஒப்பற்ற மாவீரன்
உயர்வாய்!

உன் வரவால்
வெள்ளை மாளிகை
மின்னுகின்றது

விண்ணும் மண்ணும்
உன்னை வாழ்த்தி
வணங்குகின்றது!

Wednesday, May 27, 2009

நினைத்துப் பார்க்கின்றேன் 1

முதல் வகுப்பில்
முதல் நிலையில் வந்தபொழுது
முந்திக் கொண்டு ஓடி
சொல்லத் துடித்தேன்
கேட்க யாருமில்லை!
இறைவனிடம் சொன்னேன்
தூது சென்றிருப்பார்......
அநாதை