Tuesday, February 9, 2010

தமிழ் மகன்



ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது

போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ

மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்

தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்

Wednesday, January 20, 2010

21.12.2012

ஓர் விரல் காட்டி நின்றாய்
ஆணையிடுகிறாய்
என நினத்தோம் -
ஆனால்
ஓராண்டுதான்
வாழப்போகிறேன் என
சொல்லாமல் சொல்லிவிட்டாயே
அறிஞர் அண்ணாவின்
மறைவின்போது
கலைஞரின்
கண்ணீர் அஞ்சலி

நான் மூவிரல் காட்டி
மூன்றாண்டுகள் தான்
வாழப்போகின்றோம் என
சொல்லிவிட்டேன்
புரிந்து கொண்டால் சரி
21.12.2012

Thursday, November 26, 2009

தலைவரைத் தேடுகின்றேன்


மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திட
வேண்டுமய்யா



தனித்துவாழ்
பெண்மணியாய்
வாழ்ந்திட என்ன
வரம் பெற்றேனய்யா

குழந்தைகளைக்
கரைச் சேர்க்க
கடன் கேட்டு அலைந்த
கட்சித் தலைவர்கள்
ஏராளம்
கை நீட்டி வழி காட்டும்
தலைவர்களைக் கண்டேன்

குறைக் கேட்டு
கைக் கொடுத்து
கரை சேர்க்கும்
தலைவர்களை
ஒருவரையும்
காணவில்லை

தேடுகிறேன்
கிடைக்கவில்லை

(இது ஓர் உண்மையின் புலம்பல்)
தனித்து வாழ் தாய்மார் ஒருவர் பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்டு தன் கதையை கண்ணீர்வழி வடித்த உண்மைச் சம்பவம்.பத்திரிக்கையில் சந்தித்தவர்களையும் ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவிப்பேன் என்று மனவேதனையோடு கூறினார்.)

Tuesday, October 27, 2009

இரத்த உறிஞ்சிகள்


வியர்வை சிந்தி
உழைத்த பணம்
சிரிப்புடன்
வட்டி முதலையின்
பையில்

Tuesday, October 13, 2009

தீபாவளி நினைவலைகள்

தீபாவளி தீபாவளி
திருநாள்
அதோ வருகிறது பார்
கோழிக்கறி அங்கே
இட்டிலியும் இங்கே
சுவைத்து சுவைத்து
சாப்பிடலாம் வா”

அன்று தோட்டப்புறங்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பெரியோர்களும் தீபாவளி காலங்களில் உதிர்த்த வசனங்களை நினத்துப்பார்க்கின்றேன்.
எத்துணை சுகம்!

தீபாவளிக்கு சட்டை வாங்கியாச்சா ?
ஒரு உடுப்புதான் அப்பா வாங்கினாரு....
இன்னைக்குப் போய் எங்க தங்கைச்சிக்கு,அண்ணனுக்கு,அக்காவுக்கு வாங்குவாரு!



பட்டாசு நேத்திக்கு கொஞ்சம் வாங்கிட்டோம்
தீபாவளிக்கு முத நாளு முச்சந்தி கடையிலே ரொம்ப வாங்கலாம்னு அப்பா சொன்னாரு.

அப்பா வாங்கின 007 சட்டை சின்னதா இருக்கு..
அப்புறம் போய் மாத்தணும்

டேய் இராமசாமி உங்க அப்பாகிட்ட சொல்லு.. கந்தாயி மாமாவுக்கு
இந்த ஆட்டை கூறு போடும்போது மூணு கூறு கேட்டாருன்னு சொல்லு.
தொடைபகுதியா வேணும்னு சொல்லு.
அப்புறம் காசு தருவாருன்னு சொல்லு. சரியா....அவருக்குத் தெரியும்
சரி...சரி....சொல்றேன்

டேய் எம்.ஜி.ஆர்,சிவாஜி இரண்டும் படம் ஓடுது.எதற்குடா போறே ?
முத நாளு எம்.ஜி ஆர். படம்.அப்புறம் சிவாஜி படம்.
அடுத்த நாள் கோலாலம்பூருக்கு போய் அங்க ஒரு படம் பார்க்கலாம்.
கண்ணாவையும் கேளுடா வந்தா எல்லாரும் போலாம்.

தீபாவளிக்கு காலையிலேயே வந்துடு.நம்ம வீட்லேதான் பசியாற.அப்புறம் உன் வீடு.முடிஞ்சதும் குப்பு வீட்டுக்குன்னு ஒரு வட்டம் போடலாம். மறந்திடாதே

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு தீபாவளிக்கு.பிள்ளைகளுக்கு இன்னும் ஒரு உடுப்புகூட வாங்கலே.கடைக்கார்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்கிட்டு வர்ரேன் புள்ளே.அப்புறம் கொடுக்கலாம். (தந்தையின் தவிப்பு)

தீபாவளி வந்துட்டா போதும்.இவங்க தொல்லை தாங்கலே.

வெடிடா நல்லா வெடிடா பேய் பிசாசு எல்லாம் ஓடுணும்.
பக்கத்துலே கேக்கிற சத்தத்தைவிட ரொம்ப சத்தம் வரணும்

தீபாவளிக் கார்ட்டெல்லாம் ஒட்டுங்கடா.டேய் மாமாவோட கார்டை மேலே ஒட்டுங்க.இல்லேனா மாமா வந்தா பார்த்துட்டு ஏசுவாரு.
இந்த வருஷம் கார்டு குறஞ்சிருக்கு.ஏண்டா......

அனுப்பின எல்லோருக்கும் கார்டு அனுப்பிட்டிங்களா. நாளைக்கு ஒரு சொல்லு வராதபடி பார்த்துக்கொங்க.

ஏண்டி லட்சுமி இப்போ போய் சொல்ற ..தம்பியை கூப்பிடு.டேய் விக்கி கடை தொறந்து இருந்தா ஒரு கா கட்டி மிளகா தூள் வாங்கிட்டு வா.அப்பா பேரை சொல்லு.

சொல்லிட்டேன் ..சொல்லிட்டேன் கவலைப்படாதே.உங்க அப்பா கண்டிப்பா பித்தளைச் சங்கிலி வாங்கிட்டு வந்திடுவாரு.நாளைக்குத்தானே தீபாவளி.
முதலே சீயக்காய் சவர்க்காரம் எடுத்து மூலையிலே வை.

பலகாரத்தை சாப்பிடாதிங்க. முதல்ல சாமிக்கு படையல் போடணும்.டேய்..டேய் சொன்னா கேக்க மாட்டிங்களே !நீயும் அப்படித்தான் உங்க அக்காவும் அப்படித்தான்

அம்மா...கண்ணு எரியுதம்மா..போதும்மா..தண்ணி ஊத்துங்கம்மா....
நல்லா எண்ணே தேச்சு குளிக்கணும்டா....


நான் மறந்துவிட்டதை நீங்கள் நினைவு கூறுங்களேன்.மகிழ்வோம்.
தீபாவளி வாழ்த்துகள்


(இப்பொழுது நாகரிகச் சூழலில் சுகமான இந்த வசனங்கள் மறைந்து சிக்கனம் என்ற போர்வையில் மகிழ்ச்சி போலி நடனம் ஆடுகின்றது)

Saturday, September 26, 2009

உன்னைப் போல் ஒருவன்

உலகநாயகனே
நீ நல்லவரா
கெட்டவரா

நாயகன் படத்தில்
ஆஹா ஹா என
சிரிப்பாய்
புரியவில்லை

சனிப்பெயர்ச்சியன்று
சனீஸ்வரனைக்
கேட்டேன்

நீ நல்லவரா
கெட்டவரா
ஏனெனில்
கொடுப்பவனும் நீர்
கெடுப்பவனும் நீர்

சனீஸ்வரன்
சிரித்தார்
கமலஹாசனைப் போல்

சிரிப்பின் பொருள்
புரியவில்லை

வேறு வழியின்றி
சனிதோறும்
சனீஸ்வரனை
ஒன்பது முறை
சுற்றுகிறேன்
சுற்றுவேன்

சனீஸ்வரன்
எனக்கு மட்டும்
நல்லவர்
ஆகும் வரை

கொடுப்பார் அல்லவா
சுயநலம்

Friday, September 25, 2009

இறப்பதை விட



மன உளைச்சல்
போராட்டம்
கண் விழித்த
மறு கண
சிந்தனை
பணம் ! பணம் !

இருபது முதல்
அறுபது வரை
பணம் தேடுதல்
வாழ்க்கைப்
போராட்டமா
தற்கொலை
செய்து கொண்டால்
பிரசினை இல்லையே

இருபது வயது
இளைஞன்
பதில் சொன்னான்
இறந்து மண்ணுக்கு
சொந்தமாவதை விட
உயிரோடு இருந்து
போராடி வெற்றி பெறு !

இறப்பதைவிட
இருப்பது மேல்

இது ஓர்
உண்மை உரையாடல்