Monday, September 7, 2009

தொடாச்சிணுங்கி

தொட்டவுடன்
சிணுங்கும்
தொட்டாச் சிணுங்கியே
தொட்டால்
ஏன்
சிணுங்குகின்றாய்



தொடாமல்
பசியால்
சிணுங்கும்
சுருங்கும்
அகதிகளின் குடல்கள்
குழந்தைகளின்
வயிறுகள்
ஆயிரமாயிரம்
அறியாயோ ?

என்ன
செய்யப் போகிறாய்

3 comments:

Tamilvanan said...

//என்ன
செய்யப் போகிறாய்//


என்ன செய்யலாம்..?

மனோவியம் said...

நல்லதோர் வீனை செய்து அதை நலங்கேட புழுதியில் எறிவதன்றே....தமிழர் பண்பு

Tamilvanan said...

தொட்டால் சிணுங்குவது
எந்தன் பிறவிக் குணம்
தொடாமல் சிணுங்குவது
உந்தன் பெண் இனம்

தாயாய்
தாதியாய்
உருவானாய்
பெண்ணின் இனமே
அகில தரணி ஆண்டால்
ஒரு வயிரும்
சிறு பசி அறியாதே..

பெண்ணினம் தரணி ஆள
மாற்றம் பெற
ஊக்கம் பெற
ஆற்றல் மி்கு கவிதை
செய்க..


posted by
நம்பிக்கையுடன்
தொட்டாச் சிணுங்கி