Tuesday, February 23, 2010

முருகா நீயுமா


தலைவர்களே
எப்படி ஐயா
உம் பெயருக்குள்
முருகன்



சாமிவேலு
சுப்பிரமணியம்
பழனிவேல்
சரவணன்
கேவியஸ் என்ற சுப்பிரமணியம்
முருகையா

நம் சமுதாயத்
தலைவர்கள்
அனைவருக்கும்
முருகன் பெயர்

பத்துமலை முருகா
இதுவும் உன்
திருவிளையாடலா
யாரறிவார்


புரிகின்றது முருகா
தலைவர் ஆக
உன் பெயரோடு
ஆசீர்வாதம் தேவை

Tuesday, February 9, 2010

தமிழ் மகன்



ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது

போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ

மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்

தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்