
Tuesday, July 28, 2009
சொல்லுக்குள் சொல்

Monday, July 27, 2009
சூரிய ஒளி
Sunday, July 26, 2009
பாலர் பள்ளி அமைக்க

வானம் அழ
Friday, July 24, 2009
நெஞ்சு வலிக்குதய்யா

(வயது முதிர் காலத்தில்
பிள்ளைகள் நலம் வாழ
பிரார்த்திக்கும் பாசமுள்ள
தந்தையின் கண்ணீர்த் துளி
காணிக்கை)
பிள்ளைகளின்
திருமணத்திற்குப் பின்
கடமை முடிந்து போன
மகிழ்ச்சி -
பெற்றோர் பெருமூச்சு
'இனிமேல்தான்
நிம்மதி இல்லை'
அனுபவசாலியின்
அன்புக்கூற்று
ஏற்க மறுத்து
ஏளனமாக
சிரித்தேன் - அன்று
உண்மைதான்
உணர்கின்றேன் - இன்று
வயது ஆறோ
ஆறு ஐந்து முப்பதோ
குழந்தைகள்
என்றும் நம்
பிள்ளைகள்தான்
வயது முதிர் காலத்தில்
தாங்கும் வலிமை
குறைந்த வேளையில்
பிள்ளைகள் சிரிப்பு
நம் ஆயுள் வாழ்வின்
நாள் நீடிப்பு
அவர்கள் சோகம்
நம் நாள் குறைப்பு
குழந்தைகளின்
சிரிப்பில்
பட்ட கடன்
தெரியவில்லை - அன்று
பிள்ளைகளின்
சோகத்தில்
மனவேதனை
தாங்கவில்லை - இன்று
சிறு சோதனையில் கூட
சோர்வு, மன உளைச்சல்
சிரிக்க மாட்டார்களா
ஏங்குகிறது மனம்
சிரிப்பதைப் போல்
நடிக்கும் பாசப்பறவைகள்
அதுவும் புரிகின்றது
நானும்
அழுது கொண்டே
சிரிக்கின்றேன்
இன்னும் எத்துணை
நாட்களுக்கு................
ஓ இறைவா...............
நெஞ்சு வலிக்குதய்யா
பிள்ளைகளை
மகிழ்வோடு
வாழ வழி செய்
வாழ விடு
உமக்கு
காணிக்கையாக
உதிரப்போகும்
என்னை
ஏற்றுக்கொள்
என்றும் தயார்
கண்ணீருடன்..
Thursday, July 23, 2009
பிணமாகும் நாம்..
Tuesday, July 14, 2009
சிலந்தி வலை

மாட்டிக்கொண்ட இடம்
சிலந்தி வலை
மாற்று பெயர்
நா.............................
கண்ணதாசனிடம்
இரவல் வாங்கிய வரிகள்
உமக்கும் பொருந்தும்
நாளை நீ மாறுவாய்
என்னை நினைப்பாய்.
இது உறுதி.
ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா
அறிவுப் பசிக்கு
கண்களைத் திறந்த
ஆசிரியருக்கு
மரியாதைக் கொடுங்கள்
படித்த பட்டதாரி
எழுத்தாளர்களே
நம் சமுதாயக்
மூட நம்பிக்கைகளைப்
பற்றி பெரியார்
சொல்லாததா நீர்
சொல்லிவிடப் போகின்றாய்
ஆயினும் சொல்வதை
இனியச் சொற்களால்
சொல்லுங்களேன்
இனிய எழுத்தாளர்களே