Thursday, January 20, 2011

இண்டர்லோக்

இந்தியர்களை
இழிவுபடுத்தும் நூல்

எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்
இதை தாங்க ஏது இதயம்
இரவல் வரிகள்தான்

இதயத்தை
உருகவைக்கும் வரிகள்


துடித்தோம்
அறிக்கை விட்டோம்
எரித்தோம்
ஆய்வு செய்தோம்
கூடினோம் பேசினோம்
முடிந்தபாடில்லை
யாரும்
செவி சாய்த்தபாடில்லை

இன்னும் துடிக்கின்றோம்

இது தொடர்ந்தால்
இந்தியன் என்ற பெயர் மாறி
.................
என்றே நம் இனம் மாறும்

ஆனாலும்
ஒரு வழி உண்டு

இந்தியர்களே
ஒன்று சேருங்கள்
ஒற்றுமையாக
ஒத்த முடிவெடுங்கள்

இந்தியர்களின்
எதிர்ப்பைக் காட்டுங்கள்

அதன்பின் பாருங்கள்

2 comments:

Tamilvanan said...

இதுதான்டா ஒரே ம‌லேசியா… ந‌ம‌து அர‌சாங்க‌மும் க‌ல்விய‌மைச்சும் இன்னும் ஆய்வு செய்கிற‌தாம் இந்த‌ நாவ‌லை…. ஆளும் வ‌ர்க்க‌த்தின‌ர் தின்று போடும் எலும்புக‌ளை ந‌க்கி சுக‌ம் காணும் கைக்கூலி த‌லைவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளும் இருக்கும் வ‌ரை ஆய்வுக‌ளூம் அவ‌மான‌ங்க‌ளும் தொட‌ர்ந்து கொண்டே இருக்கும்.

Sathis Kumar said...

எதிர்வரும் 27 பிப்ரவரியன்று நம் பலத்தினை மீண்டும் காட்டுவோம்..