Tuesday, February 9, 2010

தமிழ் மகன்



ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது

போராட்டங்கள்
முடியவில்லை
பிறந்த நாள் தொட்டு
போராடப் பிறந்தேனோ

மகனாக பிறந்ததில்
சிரித்துக் கொண்டே
அழுகின்றாள் தாய்

தாய் முகத்தில்
மகிழ்ச்சி வருமா
காலந்தின்
விடியலுக்காக
காத்திருக்கிறேன்

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஆண் மகனாக
பிறந்துவிட்டேன்
தாயின் முகத்தில்
மகிழ்ச்சி இல்லை

புரியவில்லை
மண்ணைப்
பார்த்தேன்

ஈழத்து மண்
புரிந்து விட்டது//

உணர்வுகளை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை...

Tamilvanan said...

//காலந்தின்//.... ????

இத‌ன் அர்த்த‌ம் என்ன‌?

ஆண் என்றாலும் பெண் என்றாலும் த‌மிழ் இன‌ம் காக்க‌வே எனறு எல்லா த‌மிழ்த் தாயும் ம‌கிழ்ந்து தாலாட்டிடுவ‌ர்.கால‌ம் க‌னியும்.