Thursday, November 26, 2009

தலைவரைத் தேடுகின்றேன்


மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திட
வேண்டுமய்யா



தனித்துவாழ்
பெண்மணியாய்
வாழ்ந்திட என்ன
வரம் பெற்றேனய்யா

குழந்தைகளைக்
கரைச் சேர்க்க
கடன் கேட்டு அலைந்த
கட்சித் தலைவர்கள்
ஏராளம்
கை நீட்டி வழி காட்டும்
தலைவர்களைக் கண்டேன்

குறைக் கேட்டு
கைக் கொடுத்து
கரை சேர்க்கும்
தலைவர்களை
ஒருவரையும்
காணவில்லை

தேடுகிறேன்
கிடைக்கவில்லை

(இது ஓர் உண்மையின் புலம்பல்)
தனித்து வாழ் தாய்மார் ஒருவர் பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்டு தன் கதையை கண்ணீர்வழி வடித்த உண்மைச் சம்பவம்.பத்திரிக்கையில் சந்தித்தவர்களையும் ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவிப்பேன் என்று மனவேதனையோடு கூறினார்.)

2 comments:

Tamilvanan said...

உண்மையை உரைக்கும் க‌விதை. உண‌ர்வுகளும் உறைக்கின்ற‌ன‌. க‌ண்க‌ளில் நீர்.

க‌விதை‌யை ப‌தித்த‌ நீங்க‌ள்,மாண‌வ‌ர்க‌ள் க‌ல்வி க‌ட‌னுத‌வி பெறும் வ‌ழிக‌ளையும் ப‌திவிட்டால் கோடி புண்ணிய‌ம் உண்டாகுமே

சுகாந்தினி said...

உம் கருத்துக்கு நன்றி


உம் புதியப் படைப்பைத் தேடுகின்றேன்.
நிறைய எழுதுங்கள்.